கார் ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த சைக்கிளோட்டி...!!!

சிங்கப்பூர்:அல்ஜூனிட் சாலை மற்றும் சிம்ஸ் அவென்யூ சந்திப்பில் கார் ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை
(ஜூன் 1) நடந்தது.
விபத்தில் சிக்கிய 50 வயதான சைக்கிள் ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து மாலை சுமார் 5.05 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் தெரிவித்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் பேஸ்புக்கில் பகிரப்பட்டன.
அதில், சைக்கிள் ஓட்டுநர் காரின் முன்பக்க கண்ணாடியில் மோதி கீழே விழுந்தார்.
சில படங்களில்,சைக்கிள் ஓட்டுநரின் முகத்தில் ரத்தம் வழிவது போல் இருந்தது.
அவருக்கு சில அதிகாரிகள் உதவி செய்வதும், அருகில் இரண்டு அவசர வாகனங்கள் நிற்பதையும் புகைப்படத்தில் காணலாம்.
கார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதியதா அல்லது சைக்கிள் ஓட்டுநர் காரில் மோதியதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அரசாங்க தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 591 சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் காயமடைந்துள்ளனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan