வருமானத்தில் பின்தங்கிய 5000 குடும்பங்களுக்கு உதவும் அறக்கட்டளை நிறுவனம்...!!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ரஹ்மத்தன் லில் ஆலமின் அறக்கட்டளை ‘அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை 2025’ என்ற முயற்சியைச் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் வருமானத்தில் பின்தங்கிய 5,000 குடும்பங்களுக்கு $60 மதிப்புள்ள சூப்பர் மார்க்கெட் வவுச்சர்களை வழங்கும்.
இது மாதிரியான நடவடிக்கைகள் நாட்டின் தாராள மனப்பான்மையையும் ஒன்றிணைக்கும் தன்மையையும் வெளிப்படுத்துவதாக அறக்கட்டளை வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
2021 முதல் சமூக திட்டங்களை செயல்படுத்தி வரும் ரஹ்மத்தன் அறக்கட்டளை நிறுவனம், இந்த ஆண்டு 300,000 வெள்ளி நிதி திரட்டும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
சிங்கப்பூர் இஸ்லாமிய மத கவுன்சில் (MUIS), ஒன் மாஸ்க் துறை, BA மெஸ்ரா, ஹார்மனி சர்க்கல்ஸ்,கேர் கார்னர் உள்ளிட்ட முக்கிய கூட்டாளிகள் இந்தத் திட்டத்தில் இணைகின்றனர்.