அவர் ஒரு கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடிக்கு பலியாகியிருக்கலாம் என்பது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் காவல்துறை தலையிடுவதற்கு முன்பு, அந்தப் பெண் வேறொரு வங்கிக் கிளையிலிருந்து $53627.31 மேல் பணத்தை எடுத்து,கிரிப்டோகரன்சிக்கு ஈடாக அதை ஒரு நபருக்கு கொடுத்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
மே மாதம் முதல் இன்றுவரை,அந்தப் பெண் S$2,47,000 க்கு மேல் பணத்தை அந்த நபரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் சந்தேகப்படும் 23 வயது நபரை அதிகாரிகள் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கைது செய்தனர்.
மேலும் அந்த நபரிடமிருந்து வேறொருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வங்கி அட்டையையும் இரண்டு மொபைல் போன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கணினித் தரவை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகியதாக இன்று அந்த நபர் மீது குற்றம் சாட்டப்படும்.