உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்து..!!!

சிங்கப்பூர்:உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிங்கப்பூர் கார் ஒன்று மலேசியப் பேருந்துடன் மோதியதில் போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.
நேற்று (மே 24) அதிகாலை 5.28 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
கார் ஓட்டுனர் மற்றும் மூன்று பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பேருந்து பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பேருந்து ஓட்டுநர் மருத்துவ உதவியை மறுத்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தைத் தொடர்ந்து, குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் பாதுகாப்பு நடைமுறைகளை மறுபரிசீலனை செய்வதாகக் கூறியது.
இதன் விளைவாக உட்லேண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் தாமதங்கள் ஏற்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், தடுப்புகள் கட்டுவதற்குள் இருவழிப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது.
இது பாதுகாப்பு விதிமீறல் என்று ஆணையம் கூறியது.
இந்த விபத்து நடந்திருக்கக் கூடாது. இதை ஒரு தீவிரமான சம்பவமாகக் கருதுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
விசாரணையில் போக்குவரத்து போலீசாருடன் ஒத்துழைப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
