சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்!!

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம்!!

சிங்கப்பூரில் பூன் லே வட்டாரத்தில் உள்ள பிளாக் 186 லிருந்து கீழே விழுந்து 50 வயதுடைய வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.

இச்சம்பவம் இன்று (மே 20) காலை சுமார் 7 மணியளவில் நடந்ததாக 8 world செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.

இச்சம்பவத்தைப் பற்றி தகவல் கிடைத்தவுடன் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்தன.

பிளாக்கின் கீழ்தளத்தில் அந்த நபர் பேச்சு மூச்சு இல்லாமல் சுயநினைவின்றி கிடந்ததை அவர்கள் கண்டதாக 8 world செய்தித்தளம் வெளியிட்டது .

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அவரது மரணத்தில் சந்தேகம் ஏதுமில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.