வார இறுதி நாளை முன்னிட்டு மலேசியா செல்பவர்கள் கவனத்திற்கு…..

வார இறுதி நாளை முன்னிட்டு மலேசியா செல்பவர்கள் கவனத்திற்கு.....

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் பாதையில் கடும் நெரிசல் இருப்பதாக குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

காலை 11.30 மணியளவில் குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவில், வாகனமோட்டிகள் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஜூன் மாதப் பள்ளி விடுமுறைகளில் அதிக நெரிசல் ஏற்படக்கூடும் என்று ஆணையம் முன்னதாகவே எச்சரித்திருந்தது.

சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நிலைமைகளுக்கு ஏற்ப பயணத்தைத் திட்டமிடுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது.

பயணிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு பேருந்து சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை அளித்தது.