இளம் பெண்களின் அழகை மெருகேற்ற உதவும் அழகு குறிப்புகள்..!!!

இளம் பெண்களின் அழகை மெருகேற்ற உதவும் அழகு குறிப்புகள்..!!!

டீன் ஏஜ் பருவம் என்பது பல ஹார்மோன் மாற்றங்களை கடந்து வரும் பருவம். நம் உடலில் மட்டுமல்லாது நம் தோற்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இப்படி மாற்றங்கள் ஏற்படும் பொழுது அதை சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படுவதுண்டு. குறிப்பாக இளம் பெண்களுக்கு முகத்தில் பருக்கள்,கருந்திட்டு, உடல் பருமன், முடி உதிர்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இந்தப் பிரச்சினையை நாம் இயற்கையாகவே கையாளலாம்.

நாம் பெரும்பாலும் முகத்திற்கு தக்காளி உருளைக்கிழங்கு,எலுமிச்சை,பப்பாளி,தயிர், வாழைப்பழம் என வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே தினமும் ஒரு பேசியல் செய்யலாம். இப்படிச் செய்வதன் மூலம் நமது சருமம் ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். மேலும் பின்வரும் சில அழகு குறிப்புகள் உங்கள் அழகை மேலும் மெருகேற்ற உதவும்.

✨️வேப்பங்கொழுந்தை நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து, அதில் சில துளிகள் நல்லெண்ணெய் சேர்த்து பருக்கள் மீது தடவினால், பருக்கள் விரைவில் மறைந்துவிடும்.

✨️சிலருக்கு நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் அரிப்பு அல்லது புண் ஏற்பட்டால், வில்வ மரக்கட்டையை அரைத்து அரிப்பு உள்ள இடத்தில் பூசினால் புண்கள் சரியாகும்.

✨️இளம் நரையை தவிர்க்க உணவில் அதிக அளவு கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

✨️பெண்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது சில துளிகள் தேங்காய் எண்ணெயை உடலில் தேய்த்து குளித்தால், அவர்களின் உடல் ஆரோக்கியமாகவும், சருமம் மென்மையாகவும் மாறும்.


✨️பெண்கள் காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் மெலிதான உடலைப் பெறலாம். வயிற்று உப்புசத்தைக் குறைக்க அடிக்கடி வெந்நீர் குடிக்கவும்.

✨️அதிக புளிப்புச் சுவை கொண்ட உணவுகளை சாப்பிடுவது உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும்.

✨️நல்லெண்ணெயுடன் சிறிது வேப்பம் பூ மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, தலையில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின்னர் தலைமுடியை அலசினால், பொடுகு முற்றிலும் நீங்கும்.

✨️உலர்ந்த ஆரஞ்சு பழத் தோல் மற்றும் எலுமிச்சை தோலை காய வைத்து பொடியாக அரைத்து அதனுடன் கடலை மாவு மற்றும் தயிர் கலந்து முகத்தில் தடவினால் கருமை நிறம் மாறும்.

✨️சீயக்காய் பொடியை மட்டும் தலையில் தேய்த்தால் கூந்தல் வறண்டு போகும். எனவே சிறிது கஞ்சியுடன் கலந்து தேய்த்தால் பட்டு போல மென்மையாக இருக்கும்.

✨️எலுமிச்சைத் தோலை உங்கள் உள்ளங்கால், முழங்கால்கள், கணுக்கால், முகம் போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் கழுவினால், நீங்கள் தடவிய பகுதிகள் பளபளப்பாகி, கருமை நீங்கும்.