பிராஸ் பசா பகுதியில் ERB சோதனைக்காக வைக்கப்பட்ட கேமராக்கள்..!!!

சிங்கப்பூர்:சாலைகளில் கேமராக்களை நிறுவுவதன் மூலம் வாகன உரிமத் தகடுகளை அங்கீகரிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மின்னணு சாலை கட்டணத்தை (ERP) கணக்கிடும் முறை சோதனையிடப்பட்டு வருகிறது
நவம்பர் 2024 இல் தொடங்கிய இந்த சோதனை இந்த ஆண்டு அக்டோபர் வரை தொடரும். இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த தற்போது எந்த திட்டமும் இல்லை.இது இன்னும் ஆராய்ச்சி கட்டத்தில் உள்ளது.
‘ERP X’ எனப்படும் புதிய ERP அமைப்பிற்காக, சோதனை அடிப்படையில், பிராஸ் பசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் ஒன்பது கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.இந்த கேமராக்கள் வாகன உரிமத் தகடுகளை அடையாளம் கண்டு, ஸ்மார்ட்போன் செயலி மூலம் கட்டணங்களை ஓட்டுநர்களுக்கு தானாகவே தெரிவிக்கும்.
இந்தச் சோதனையை அரசாங்கத்தின் தொழில்நுட்பம் சார்ந்த சுயாதீனப் பிரிவான ஓப்பன் கவர்மென்ட் புரோடக்ட்ஸ் (OGP) நடத்துகிறது. தற்போதைய ERB அமைப்பு வாகனங்களில் நிறுவப்பட்ட வன்பொருளின் அடிப்படையில் கட்டணங்களைக் கணக்கிடுகிறது.
பொதுமக்களின் நலனுக்காக தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கும் OGP, ஆண்டுதோறும் புதுமையான தீர்வுகளுக்கான ‘ஹேக்கத்தான்’ இயக்கத்தை நடத்துகிறது.அதன் கீழ், கடந்த ஆண்டு ஹேக்கத்தானில் இடம்பெற்ற 35 திட்டங்களில் கேமரா ERB அமைப்பும் ஒன்றாகும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
