விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மீது குற்றச்சாட்டு…!!

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மீது குற்றச்சாட்டு...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த 22 வயதான அசிம் ஷா அபுபாக்கர் ஷா மீது தவறான தகவல்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி விமானத்தை வெடிகுண்டு மூலம் தகர்க்கப் போவதாக அசிம் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகப் பதிவு குறித்த தகவல் தங்களுக்கு இரவு 7.20 மணிக்கு கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சமூக ஊடகப் பதிவு வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் விசாரணையின் மூலம் அசிம் அடையாளம் காணப்பட்டார்.

இதனால் ஓடுபாதையில் இருந்த விமானம், சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2 க்கு திருப்பி விடப்பட்டது.

பின்னர் அசிம் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறாக பதட்டமான சூழலை உருவாக்கும் இது போன்ற கருத்துக்களை பதிவிட்டதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக $50,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.