டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!!
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சேதம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மக்கள் பீதியில் கூச்சலிட்டபடி கட்டிடங்களில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.