தேர்தல் தினம் பொது விடுமுறை!! நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!!
சிங்கப்பூரில் மே 3 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தகவலை தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் வேட்புமனு தாக்கல் தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தல் நடைபெறும் தினத்தன்று பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் அன்றைய தினம் தங்களது ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக மனிதவள அமைச்சகம் ஏப்ரல் 15 ஆம் தேதி(நேற்று) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.