சாங்கி விமான நிலையத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண் கைது…!!!

சாங்கி விமான நிலையத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண் கைது...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத்துறை ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படும் 42 வயது பெண் ஒருவர் சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.

ஜூன் 6 ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு உதவி கோரி போலீசாருக்கு அழைப்பு வந்ததை அடுத்து, சாங்கி விமான நிலைய முனையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அந்தப் பெண்ணை கைது செய்யப்பட்டதாக கூறப்படும் காணொளி ஆனது ஜூன் 7 அன்று வெளியானது.

இந்த காணொளியில் மூன்று காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணை தரையில் பிடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

மேலும், பயணப் பைகளை சோதனை செய்யும் இடத்தில் பலர் இதைப் பார்த்துக் கொண்டிருந்ததும் தெளிவாகத் தெரிந்தது.

அந்தப் பெண் அலறுவதை வழிப்போக்கர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

விமானப் பயணத்திற்கான பெட்டிகளை பாதுகாக்கும் சிறப்பு இயந்திரங்களில் அந்தப் பெண் ஆரம்பத்தில் தனது கையை கடுமையாகத் தட்டிக் கொண்டிருந்ததாக திரு. லியு என்ற இணையவாசி குறிப்பிட்டார்.

விமான நிலைய அதிகாரிகள் தன்னை அணுகிய பிறகு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு குழப்பம் முடிவுக்கு வந்ததாகவும், போலீசார் அந்தப் பெண்ணை கைவிலங்குகளுடன் அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.