சிங்கப்பூரில் அலுவலகத்தை திறக்கவுள்ள கேட்ஸ் நிறுவனம்..!!

உலகின் தனியார் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான கேட்ஸ் அறக்கட்டளை சிங்கப்பூரில் ஒரு அலுவலகத்தைத் திறக்கும் என்று அதன் தலைவரும் அறங்காவலருமான பில் கேட்ஸ் திங்கள்கிழமை (மே 5) தெரிவித்தார்.
கேட்ஸ் அறக்கட்டளையானது, அறிவியலை அணுகவும், மனிதநேய சமூகத்துடன் ஒத்துழைக்கவும், இங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிக்காகவும் ஒரு அலுவலகத்தை நிறுவுகிறது,” என்று மைக்ரோசாப்ட் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் அதிபரும் இணை நிறுவனருமான திரு.கேட்ஸ் கூறினார்.
சிங்கப்பூரில் அறக்கட்டளையின் திறப்பு தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள அரசாங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் அதன் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதாக அமையும்.
பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் அமைய உள்ள சிங்கப்பூர் அலுவலகம் கேட்ஸ் அறக்கட்டளையின் 12வது அலுவலகமாகும்.
இதன் தலைமையகம் அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ளது.மற்றொரு அமெரிக்க அலுவலகம் வாஷிங்டனில் உள்ளது.
அதன் மற்ற ஒன்பது அலுவலகங்கள் இங்கிலாந்து, இந்தியா, சீனா, எத்தியோப்பியா, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, செனகல் மற்றும் கென்யாவில் உள்ளன.
இது குறித்து திரு.லீ தனது பேஸ்புக் பக்கத்தில், கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பிற நிறுவனங்கள் ஆர்வத்தோடு தங்களது வர்த்தகங்களை தொடர்ந்து சிங்கப்பூரில் முதலீடு செய்வதையும், தொடர்ந்து உறவுகளை வலுப்படுத்துவதையும் வரவேற்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
