சிங்கப்பூரில் பாட்டி வீட்டிற்கு தீ வைத்த பேரன்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் பாட்டி வீட்டிற்கு தீ வைத்த பேரன்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரைச் சேர்ந்த 27 வயது லெனார்ட் டான் யொங் ஜியா கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தனது பாட்டியை ஆறு முறை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.ஆனால் பாட்டி தொலைபேசியை எடுக்கவில்லை என்பதால்

அவர் நேரடியாக பாட்டி வீட்டிற்கு சென்று வெளிக் கதவை திறக்கச் சொல்லி சத்தமிட்டுள்ளார்.ஆனால் பாட்டி திறக்கவில்லை.

பாட்டி வீட்டில் இருந்ததை உணர்ந்த டான் கோபத்தில் அட்டைப்பெட்டிக்கு தீ வைத்து அதனை வீட்டில் மரக்கதவுக்கும் உலோக வெளிக் கதவுக்கும், இடையே இருந்த பகுதியில் விட்டுச் சென்றார்.

ஏற்கனவே அங்கு மற்றொரு அட்டைப்பெட்டி இருந்ததால் தீ பலமாக எரியத் தொடங்கி உள்ளது.

அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் டான் அங்கிருந்து கிளம்பி உள்ளார்.

பாட்டியின் அண்டை வீட்டுக்காரர்கள் அவருக்கு உடனடியாக தகவல் கொடுத்ததால் பாட்டி தீயை அனைத்துள்ளார்.

டானின் உறவினர் சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டான் பின்னர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

டானுக்கு நேற்று (ஜூலை 4) 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.மற்றொரு குற்றச்சாட்டு கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

அவற்றை சரி செய்வதற்கும் சுமார் 7000 வெள்ளி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan