பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது…..

பூமியின் சொர்க்கம்..... தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.....

பூமியின் சொர்க்க பூமி என்று வர்ணிக்கப்படும் இடங்களில் காஷ்மீரும் ஒன்றாகும்.

ஆனால் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் பகுதி இப்போது வெறிச்சோடியுள்ளது. பல ஹோட்டல்களும் தங்கும் விடுதிகளும் காலியாக உள்ளன.

ஸ்ரீநகரின் வழக்கமாக பரபரப்பாக இருக்கும் டால் ஏரியும் வெறிச்சோடி காணப்படுவதால், அங்குள்ள படகு ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் ஜூன் மாதம் வரை நூற்றுக்கணக்கான ஹோட்டல் அறைகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் முன்பதிவு செய்யப்பட்டன.ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

கிட்டத்தட்ட அனைத்து முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கான ஹோட்டல் தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இது உள்ளூர் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. கைவினைப் பொருட்கள் விற்பனையாளர்கள் முதல் உணவு விற்பனையாளர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் வரை பலர் தங்கள் வணிகங்களில் பெரும் பகுதியை இழந்துள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில் செழிப்பாக இருந்த காஷ்மீரின் சுற்றுலாத் துறை, ஏப்ரல் மாதத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனால் காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்றும், பொருளாதாரத்தின் முக்கிய தூணாக விளங்கும் சுற்றுலாத் துறை மீண்டு வர வேண்டும் என்பதே அங்குள்ளவர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.