தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது...???

அன்பு,அக்கறை,அரவணைப்பு,பாசம்,நேசம் தியாகம் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் காண வேண்டும் என்றால் அது நம் தாயிடம் மட்டுமே உள்ளது.
அப்படிப்பட்ட தாய்மையை போற்றும் வகையில் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தினம் எப்போது தொடங்கியது?
ஐரோப்பிய வரலாற்றில் இடைக்காலத்தில் (5 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை)பிறந்து, வளர்ந்த இடத்திலிருந்து வெளியேறிய மக்கள் தங்கள் தாய்மார்களைப் பார்க்கத் திரும்புவர்.
இந்த நிகழ்வு கிறிஸ்தவ பண்டிகையான Lent திருவிழாவின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
அந்தக் காலத்தில், 10 வயது குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேலை தேடிச் செல்வது வழக்கமாக இருந்தது.
எனவே அந்த நாள் குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கான ஒரு வாய்ப்பாகக் காணப்பட்டது.
பிரிட்டனில் இது “Mothering Sunday” என்று அழைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் Lent திருவிழாவின் தேதிகள் மாறுவதால் ஞாயிற்றுக்கிழமையின் தேதியும் மாறுபடும்.
பிரிட்டனில் இது “Mothering Sunday” என்று அழைக்கப்பட்டாலும், அமெரிக்காவில் கொண்டாடப்படும் அன்னையர் தினத்துடன் இது தொடர்புடையது அல்ல.
அமெரிக்காவில் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அமெரிக்கரான அன்னா ஜார்விஸ், மே 12, 1907 அன்று தனது தாயாருக்குச் சிறிய நினைவு அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார்.
அன்னா ஜார்விஸ் தனது தாயாரின் மறைவுக்கு பிறகு அனைத்து தாய்மார்களையும் கௌரவிக்கும் ஒரு நாளை உருவாக்க விரும்பினார்.
எனவே அவர் 1910 இல்,அன்னையர் தினத்தை ஒரு தேசிய விடுமுறையாக அங்கீகரிக்க பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
1914 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் இவரது வேண்டுகோளை ஏற்றார்.
எனவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.
இப்படி உலகெங்கிலும் உள்ள நாடுகள் அன்னையர் தினத்தை வெவ்வேறு நாட்களில் கொண்டாடுகின்றது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan