சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

சிங்கப்பூர் ஒரு பெரிய பொருளாதார மையம்.அங்கு பல வேலை வாய்ப்புகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன.அங்கு Manpower Singapore என்ற நிறுவனம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.

இந்த நிறுவனமானது வேலை தேடுபவர்களுக்கும் ,கம்பெனிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது.

இது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளைக் கொண்டு வருகிறது.

Manpower Singapore :

1984 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ManpowerGroup தொடங்கப்பட்டது.உலகெங்கிலும் உள்ள கம்பெனிகளுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் மனிதவளங்களை நிர்வகிப்பதில் உதவுவதில் இது மிகவும் பிரபலமானது.

அதன் சேவைகள் :

▪ Recruitment

▪ Temporary Staffing

▪ HR Outsourcing

▪ Professional Consulting

இந்த நிலையில் ManpowerGroup நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி வேலை வாய்ப்பு மோசடிகள் நடப்பதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது.ManpowerGroup இன் ஊழியர்கள் என்று கூறி வேலைக்காக முயற்சி செய்பவர்களை ஏமாற்ற முயற்சி செய்கின்றனர்.

இந்த மோசடியில் புதியவர்கள் மற்றும் பழையவர்கள் உள்ளனர்.அவர்களில் எவரும் ManpowerGroup நிறுவனத்தின் ஊழியர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

மோசடியில் கண்டறிந்த தகவல்கள் :

▪ டெபோரா : இவர் ManpowerGroup இன் Recruitment Manager ஆக இருப்பதாக கூறிகொள்கிறார்.

▪ மரியா : இவர் ManpowerGroup இன் ஆட்சேர்ப்பு குழுவைச் சேர்ந்தவர் என்று கூறிகொள்கிறார்.

▪ ரே எல் : Kuok/ManpowerGroup இன் பிரதிநிதி என்று கூறிகொள்கிறார்.

▪ மெலிசா ஹாமில்டன் : ManpowerGroup இன் Board Recruitment Coordinator என்று கூறிகொள்கிறார்.

ஆனால் இவர்கள் எவருக்கும் ManpowerGroup நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லை.

மோசடிக்காரர்கள் LinkedIn,Whatsapp,போலி வெப்சைட்கள் மற்றும் போலி இ-மெயில்கள் ஆகியவைகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இதன் மூலமாக ஆட்களைத் தேர்வு செய்வது போல உங்களிடம் பேசி Calendly போன்ற ஆப்கள் மூலம் போலி சந்திப்புகளை ஏற்பாடு செய்வார்கள்.

ஆன்லைன் மூலமாக Assessments நடத்துவது போல் நடிப்பார்கள். உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைக் கேட்பார்கள்.

தொலைபேசி மூலமாக பணம் அல்லது முக்கியமான தகவல்களைக் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.

இத்தகைய மோசடி சம்பவங்கள் ManpowerGroup நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களின் வலையில் சிக்கி கொள்ளாமல் கவனமாக இருங்கள்.