குத்தகையை பெற லஞ்சம் வழங்கிய இந்தியாவைச் சேர்ந்தவர்!! அபராதம் விதிப்பு!!

குத்தகையை பெற லஞ்சம் வழங்கிய இந்தியாவைச் சேர்ந்தவர்!! அபராதம் விதிப்பு!!

சிங்கப்பூர் : கூட்டுரிமை வீட்டு மேலாளருக்கு லஞ்சம் வழங்கிய குற்றத்திற்காக பன்னீர்செல்வம் ஏழுமலை என்ற குத்தகைக்காரருக்கு 15000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் கூட்டுரிமை வீட்டின் நிர்வாகிக்கு லஞ்சம் கொடுத்து குத்தகையை பெற்றுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட கூட்டுரிமை வீட்டின் வாகனப் பாதையில் தரைக்கற்களைப் பொருத்தும் ஏலக்குத்தகையைப் பன்னீர்செல்வம் பெற்றதாக சொல்லப்படுகிறது.

அந்தப் பாதையில் பூசப்பட்டிருந்த சாயம் பணி முடிந்து ஒரு வாரம் கழித்து வெளுக்க தொடங்கியதோடு மட்டும் இல்லாமல் கற்களிலும் வெடிப்பு ஏற்படத் தொடங்கியது.

Mountech எனும் பழுதுபார்ப்பு ,பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நடவடிக்கை இயக்குநர்,உரிமையாளர் இந்தியாவைச் சேர்ந்த பன்னீர்செல்வம்.

லஞ்சம் வழங்கப்பட்ட போது Bobby Augustine Andrews என்பவர் கூட்டுரிமை வீட்டின் மேலாளராக பணியில் இருந்தார்.அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.