சிங்கப்பூரில் உணவகங்களில் குடிநீர் இலவசமா அல்லது பணம் செலுத்த வேண்டுமா?

சிங்கப்பூரில் உணவகங்களில் குடிநீர் இலவசமா அல்லது பணம் செலுத்த வேண்டுமா?

இம்மாதம் 12ஆம் தேதி பாட்டாளி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்.
ஜெரால்ட் கியாம் இது தொடர்பாக பேஸ்புக்கில் தெரிவித்தது என்னவென்றால்.

குடிநீரும் சர்க்கரை நிறைந்த பானங்களும் கிட்டத்தட்ட ஒரே விலையில் விற்கப்படுவதால் ஆரோக்கியமற்ற பானங்களை பலரும் தேர்வு செய்து வாங்கும் நிலை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புற அமைச்சகம் உணவகங்களில் குடிநீர் விலைகளை குறைக்க ஊக்குவிக்க வேண்டும் என்று திரு கியாம் கூறினார்.

அது பற்றி இணையத்தில் மக்கள் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்தனர்.

ஆரம்பத்திலிருந்தே குடிநீரை இலவசமாக வழங்குகின்றன. இந்த நடைமுறை வாடிக்கையாளர்களை வரவேற்கவும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கத்தை ஆதரிக்கவும் உதவுகிறது என்று கூறின.

இருப்பினும் இந்த நடைமுறை சிறு தனியார் உணவகங்களுக்கு கட்டுபடி ஆகாது என்று சில உரிமையாளர்கள் கூறினர்.

வேறு சில உணவகங்கள் , உயர்தர குடிநீர் உணவருந்தும் அனுபவத்தை மேம்படுத்தும் என்று கூறினர்.

தற்போது உள்ள விலைவாசியால் ஒரு சில உணவகங்கள் தண்ணீரை இலவசமாக கொடுக்க விரும்பவில்லை. அதில் வரும் வருமானத்தை விட்டுக் கொடுக்கவும் விரும்பவில்லை.

ஏனென்றால் நீருக்கென்று ஒரு சில உணவகங்கள் பொது பயனீட்டு கட்டணம் செலுத்துவதை குறிப்பிட்டு கூறினர்.

அதேபோல் தண்ணீருக்கு பானங்களின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுவதை பல உணவகங்கள் மறுத்தன.