பொங்கோல் ஆற்றுக்குள் விழுந்த நபர் பத்திரமாக மீட்பு…!!!

பொங்கோல் ஆற்றுக்குள் விழுந்த நபர் பத்திரமாக மீட்பு...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பொங்கோல் நீர்முனையில் ஆற்றில் விழுந்த ஒருவரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மீட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (மே 24) காலை 9 மணியளவில் நடைபெற்றது.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆற்றில் விழுந்த ஒருவரை மீட்பதற்காக பொங்கல் வடக்கு வீதிக்கு சென்றதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

ஆற்றில் விழுந்தவரை மீட்பதற்காக கயிறுகள் மற்றும் மிதவைகள் பயன்படுத்தப்பட்டன.

பின்னர் அவர் செங்காங் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.