செங்காங்கில் மூதாட்டி கொலை..!!!கைதான நபர் மீது நீதி மன்றத்தில் குற்றச்சாட்டு…!!

செங்காங்கில் மூதாட்டி கொலை..!!!கைதான நபர் மீது நீதி மன்றத்தில் குற்றச்சாட்டு...!!

சிங்கப்பூர்:செங்காங்கில் உள்ள வீட்டில் 79 வயது மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.

இறந்த மூதாட்டியின் பெயர் வாங் ஹௌ கீவ் என கூறப்படுகிறது.

அவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் யுயென் லி என அடையாளம் காணப்பட்ட 44 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் ஜூன் 1,2025 அன்று நடந்தது.

ஃபெர்ன்வேல் சாலையின் பிளாக் 465B, வீட்டிலிருந்து முற்பகல் 11.50 மணிக்கு அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இறந்த பெண்ணும் கைது செய்யப்பட்ட ஆணும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த நபர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.