பேஸ்புக்கில் அவதூறு பரப்பியவரின் மன்னிப்பை ஏற்ற NTUC தலைமைச் செயலாளர்…!!!

பேஸ்புக்கில் அவதூறு பரப்பியவரின் மன்னிப்பை ஏற்ற NTUC தலைமைச் செயலாளர்...!!!

தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் பொதுச் செயலாளர் இங் சீ மெங், தனது முகநூல் பக்கத்தில் தனக்கு எதிராகப் பதிவிடப்படும் கருத்துகள் குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

ஸுங் சியா ஹுவாட் என்றும் அழைக்கப்படும் ரிச் ஸுங் மன்னிப்பு கேட்ட பிறகு இந்த விஷயத்தை முடித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட்டும் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங்கும் ஸுங்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஒரு தனிநபர் அரசாங்கக் கொள்கையுடன் உடன்படாமல் இருக்கலாம்.ஆனால் அவர்களின் நேர்மை மற்றும் கண்ணியத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது சரியல்ல என்று அமைச்சர்கள் கூறினர்.