தமிழகத்துக்கு பெருமை..!!ஆசிய குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்..!!

தமிழகத்துக்கு பெருமை..!! ஆசிய குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்..!!

உலான்பத்தார்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியாவின் தலைநகரான உலான்பத்தாரில் நடைபெற்றது.

போட்டியின் கடைசி நாளான ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று ஆண்களுக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது.

அந்த இறுதிச் சுற்றில் இந்திய வீரரான விஸ்வநாத் சுரேஷ், ஜப்பானின் டாய்சி இவாவும் நேருக்கு நேர் மோதி கொண்டனர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தேஆ திக்கம் செலுத்திய விஸ்வநாத், டாய்சியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

விஸ்வநாதன் சுரேஷ் 5-0 என்ற மதிப்பெண்ணில் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.விஸ்வநாத் சுரேஷ் சென்னை பெரம்பூரை சேர்ந்தவர்.

ஒட்டுமொத்தத்தில் இந்தியா 5 தங்கம் உட்பட 16 பதக்கங்களை வென்று 2-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது.

இந்தியாவை விட 1 தங்கப்பதக்கம் அதிகமாக வென்ற நாடாக கஜகஸ்தான் (6 தங்கம்) பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

விஸ்வநாத் சுரேஷின் இந்த வெற்றியானது தமிழகத்துக்கு பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK