சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!!
சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் ஜொகூருக்கு செல்லும் 2 சுங்கச் சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குடிநுழைவு,சுங்கச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் குறித்து அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
பள்ளி விடுமுறை மற்றும் கனமழையால் போக்குவரத்து நெரிசல் மோசமாகி விட்டதாக கூறியது.