புக்கிட் தீமா பகுதியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புக்கிட் தீமா குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் மூன்று வெளிநாட்டினர் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் எச்சரிக்கை ஒலியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை நிறுவுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் மதிப்புமிக்க பொருட்களை வைத்திருக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று (மே 14) மூன்று வெளிநாட்டினரையும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் சுமார் 700,000 வெள்ளி மதிப்புள்ள நகைகள், ஆடம்பர கடிகாரங்கள் மற்றும் பணத்தை திருடியதாக நம்பப்படுகிறது.
திருட்டு வேலையில் ஈடுபட்ட மூவர் மீதும் திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அபராதமும் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
அவர்கள் அடுத்த திங்கட்கிழமை (மே 19) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan

