சிங்கப்பூர் : ஜூன் மாதம் நிலச் சோதனைச் சாவடிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!!

சிங்கப்பூர் : ஜூன் மாதம் நிலச் சோதனைச் சாவடிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!!

அடுத்த மாதமான ஜூன் மாத விடுமுறையின் போது அதிலும் குறிப்பாக ஹஜ்ஜீப் பெருநாளின் (ஜூன் 6-9) உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று சிங்கப்பூரின் குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் எதிர்பார்க்கிறது.

அண்மையில் விசாக தின நீண்ட வாரயிறுதி நாட்களான மே 8 ஆம் தேதி முதல் மே 13 ஆம் தேதி வரை 3 மில்லியன் பயணிகள் உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்ததாக ஆணையம் தெரிவித்தது.

குறிப்பாக 9 ஆம் தேதியான அன்றைய நாளில் மட்டுமே 546,000 க்கும் அதிகமானோர் அந்த இரு சோதனைச் சாவடிகளைக் கடந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 3 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசலில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஆணையம் கூறியது.

போக்குவரத்து நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு பயணத்தை மேற்கொள்ளுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது.

மேலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கு பேருந்து சேவைகளைப் பயன்படுத்தலாம் என்றும் ஆணையம் ஆலோசனை அளித்துள்ளது.