சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஊதியத்தில் வேகமான வளர்ச்சி!!

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஊதியத்தில் வேகமான வளர்ச்சி!!

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் , சிங்கப்பூரில் ஊதியம் 2023 ஆம் ஆண்டைவிட 2024 ஆம் ஆண்டு வளர்ச்சி கண்டதாக கூறப்பட்டுள்ளது.

பணவீக்கம் குறைவாக இருந்ததால் ஊதியம் வேகமாக அதிகரித்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பண வீக்கம் 2.4 சதவீதமாக இருந்தது. 2023 ஆம் ஆண்டில் பணவீக்கம் 4.8 சதவீதமாக இருந்தது.

2019 ஆம் ஆண்டில் இருந்து ஊதியத்தின் உயர்வு கடந்த ஆண்டு அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

அதன் வளர்ச்சி சதவீதம் 2018 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டு அடிப்படையில் சரிந்தது கொண்டு வந்தது. பணவீக்கத்தைத் தவிர்த்து கடந்த ஆண்டு 5.6 சதவீதம் அதிகரித்தது.

2023 ஆம் ஆண்டில் அது 5.2 சதவீதமாக இருந்தது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அமைச்சகம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

நடத்தப்பட்ட ஆய்வில், ஊதியத்தை அதிகரிக்க திட்டமிடும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறியிருக்கிறது.