சிங்கப்பூரில் சிங்பாஸ் மோசடி விவகாரம்…!!!6 பேர் கைது..??? இது தொடர்பான தகவலை அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!!

சிங்கப்பூரில் சிங்பாஸ் மோசடி விவகாரம்...!!!6 பேர் கைது..??? இது தொடர்பான தகவலை அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 15 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் Singpass தகவல்களை மறுவிற்பனை செய்தது அல்லது மற்றவர்களுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.

இந்த Singpass விவரங்கள் பிறர் வசம் சென்ற பின்னர், புதிய வங்கிக் கணக்குகள் திறக்கவும், புதிய மொபைல் எண்கள் பதிவு செய்யவும் மோசடிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, வணிக விவகாரத் துறை, ஏழு காவல் நிலையங்கள் மற்றும் சிங்பாஸ் மோசடி எதிர்ப்புக் குழு இணைந்து, ஜூலை 8 முதல் 11 வரை தீவு முழுவதும் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் பயனாக 18 முதல் 68 வயதுக்குட்பட்ட 13 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 19 முதல் 56 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு பெண், கணினி தொடர்பான மோசடிச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் போது, சிலர் தங்கள் Singpass விவரங்களை விற்றதாகவும், சிலர் அவற்றை அந்நியர்களிடம் அடையாளச் சரிபார்ப்பின்றி ஒப்படைத்ததாகவும் தெரியவந்தது.

மேலும், சிலர் போலி வேலை விளம்பரங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களை நம்பி தங்கள் Singpass கணக்குகளை வழங்கியதையும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த மோசடியுடன் தொடர்புடைய மொத்தத் தொகை S$165,540 என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது Singpass விவரங்களை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், எவரிடமும் பகிர வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan