பாம்பை கண்டால் படையே நடுங்கும் … என்ற பழமொழி உண்டு. பாம்பு என்றால் யாருக்குத்தான் பயம் இருக்காது.அதிலும் சில பாம்புகளின் விஷங்கள் உயிரையே பறிக்கக்கூடிய வீரியம் கொண்டது. அதே பாம்புகளின் விஷங்கள் மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் 230 வகையான பாம்பினங்கள் உள்ளது. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுத்தன்மை உள்ளது.பாம்புகள் தன் இரையை வேட்டையாடுவதற்காக விஷயத்தைப் பயன்படுத்துகின்றன.பாம்பு தன் பற்களால் இரையைக் கடிக்கும்போது, பாம்பின் பற்களுக்குப் பின்னால் உள்ள நச்சுப் பையில் இருந்து விஷம் வெளியேறி, இரையின் உடலில் நுழைந்து அதைக் கொன்றுவிடும்.இத்தகைய தன்மை கொண்ட பாம்புகளை பற்றிய சில விவரங்கள்..
🔶️ பாம்புகளின் மொத்தம் 3600 இனங்கள் உள்ளதாம்
🔶️ அதில் சுமார் 600 இனங்கள் மட்டுமே நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது.
🔶️ பாம்பிற்கு 200 முதல் 400 க்கும் மேற்பட்ட முதுகெலும்புகள் உள்ளதாம்.
🔶️ பாம்பின் ஆயுட்காலம் 20 முதல் 30 ஆண்டுகள் ஆகும்.
🔶️ சாதாரண பாம்பு 150 கிலோ முதல் 330 பவுண்டுகள் வரை எடை கொண்டதாக இருக்கும்.