தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கசிந்த 3,300 பேரின் தனிப்பட்ட விவரங்கள்…!!!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கசிந்த 3,300 பேரின் தனிப்பட்ட விவரங்கள்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சொத்து முகவர் நிறுவன மன்றத்திலிருந்து அனுப்பிய மின்னஞ்சலின் வழி சுமார் 3,300 பேரின் பெயர்கள் மற்றும் அடையாள அட்டை எண்களின் விவரம் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப செயல்பாட்டில் ஏற்பட்ட கோளாறே இந்த சம்பவத்திற்கு காரணம் என மன்றம் தெரிவித்துள்ளது.

தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தொடர்புத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக மன்றத்தில் ரியல் எஸ்டேட் விற்பனையாளர் தேர்வுக்கு பதிவு செய்தவர்கள் பாதிக்கப்பட்டதாக மன்றம் தெரிவித்தது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய மற்றும் முன்னாள் சொத்து முகவர்கள்,ரியல் எஸ்டேட் விற்பனையாளர் தேர்வுக்கான முந்தைய வேட்பாளர்கள் என 18 பேருக்கு அந்தத் தகவல் அனுப்பப்பட்டதாக மன்றம் குறிப்பிட்டது.

தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய மின்னஞ்சல்களைப் பெற்றவர்கள், அந்த மின்னஞ்சல்களை அறிந்தவுடன் அவற்றை நீக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட கணினி செயல்பாட்டை முடக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மூல காரணத்தை கண்டறிய முழு விசாரணையை தொடங்கியதாகவும் CEA கூறியது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan