செயிண்ட் ஜோசப் தேவாலய சம்பவம்..!! சந்தேகநபர் பிடிபட்டாரா..?

செயிண்ட் ஜோசப் தேவாலய சம்பவம்..!! சந்தேகநபர் பிடிபட்டாரா..?

சிங்கப்பூர்: புக்கிட் தீமாவில் அமைந்துள்ள செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் இன்று(21.12.25) காலை சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் விசாரணையின் ஒரு பகுதியாக,பிற்பகல் சுமார் 1:45 மணியளவில் தேவாலய நுழைவாயிலுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற செடான் காரில் இருந்து கைவிலங்கிடப்பட்ட ஒருவரை காவல்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

போலீசார் அந்த வாகனத்தின் பெட்டியைத் திறந்து உள்ளிருந்த பொருட்களை ஆய்வு செய்தனர்.அதே நேரத்தில்,சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் ஒருவர் ஆதாரங்களைச் சேகரிப்பதும் கவனிக்கப்பட்டது.சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற ஆய்வுக்குப் பிறகு, போலீசார் வாகனத்தின் டிரங்கை மூடினர்.

முன்னதாக, காலை 7:10 மணியளவில் தேவாலயத்திலிருந்து உதவிக்கான அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியை காவல்துறையினர் சுற்றிவளைத்து பொதுமக்களை வெளியேற்றியதாக தெரிவித்தனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் உயிரியல், கதிரியக்க மற்றும் வெடிபொருள் பாதுகாப்புப் படையினரும் திரட்டப்பட்டனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முழுமையான ஆய்வின் பின்னர், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது என காலை 11 மணியளவில் போலீசார் உறுதி செய்தனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK