இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரியின் முதல்வர் ஒருவர் வகுப்பறைச் சுவர்களில் மாட்டு சாணத்தைத் தடவியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் டெல்லியில் உள்ள லட்சுமிபாய் கல்லூரியில் நடந்தது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், முதல்வர் பிரத்யுஷ் வத்சலா சுவர்களில் மாட்டு சாணத்தைப் பூசுவதைக் காணலாம்.
வகுப்பறையில் வெப்பத்தைக் குறைக்க சாணத்தைப் பூசியதாக அவர் கூறினார்.
வகுப்பறைகளில் வெப்பத்தைக் குறைப்பதற்காக கல்லூரி ஆராய்ச்சி நடத்தி வருவதாகவும்,அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மாட்டு சாணம் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டது.
மேலும் வகுப்பறையில் மாட்டு சாணத்தை பூசுவதற்கு முன்பு மாணவர்களிடம் அனுமதி பெறப்படவில்லை.