தனது குழந்தைக்கு பள்ளியில் அட்மிஷன் கிடைப்பதற்காக தாய் செய்த செயல்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பெண் ஒருவர் தனது மகளை தொடக்கநிலை பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்காக தவறான முகவரியைக் கொடுத்துள்ளார்.
இதற்காக 41 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, தொடக்கப்பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு அவர் தவறான முகவரியைக் கொடுத்தார்.
தனது மகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காகவே அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
பள்ளியில் குறிப்பிட்ட இடங்களுக்கு அதிகமான விண்ணப்பங்கள் இருந்தால்,பள்ளி நிர்வாகம் அருகில் வசிக்கும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதை கருத்தில் கொண்டு அந்தப் பெண் கொடுத்த தவறான முகவரி பள்ளியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.
மேலும் நீதிமன்றத்தில் அவருக்காக வாதிட வழக்கறிஞர் இல்லை.
இதனால் அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, S$3,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
2018 ஆம் ஆண்டில் 10க்கும் குறைவான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொடக்கப் பள்ளியில் சேர்க்க தவறான தகவல்களை வழங்கியதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது போன்ற தவறான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், குழந்தைகள் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan