19 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆடவர்..!!!

19 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆடவர்..!!!

பிரிட்டனைச் சேர்ந்த கென்ட்டன் கூல் 19வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

ஷெர்பா அல்லாத எவரெஸ்ட் சிகரத்தை அதிக முறை ஏறியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

51 வயதான இவர் 8,849 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நேற்று அடைந்ததாக கூறப்படுகிறது

அவருடன் நேபாள ஷெர்பா டொர்ஜி கியால்ஜென் 23வது முறையாக சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தை 30 முறை ஏறி சாதனை படைத்த நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா காமி ரித்தா,தனது சொந்த சாதனையை முறியடிக்க மீண்டும் இமயமலையில் ஏறியுள்ளார்.