இந்நிலையில், இந்தப் போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக ஐபிஎல் நிர்வாகம் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு அவரது போட்டிக் கட்டணத்திலிருந்து ரூ.24 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இதற்கிடையில், அணியில் உள்ள மற்ற வீரர்கள் தலா ரூ.6 லட்சம் அல்லது அவர்களின் போட்டிக்கான ஊதியத்தில் 25 சதவீதம், இதில் எது குறைவாக இருக்கிறதோ அதை அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.