சிக்னலை மீறிச் சென்றதால் நடந்த விபரீதம்...!!!

சிங்கப்பூர்: புகிஸில் 41 வயது மதிக்கத்தக்க சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சிவப்பு விளக்கை மீறிச் சென்றதால் கார் மோதி சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த விபத்து நேற்று (19 ஆம் தேதி) காலை 6:30 மணிக்கு விக்டோரியா தெருவில் இருந்து காலாங் சாலை நோக்கிச் செல்லும் பகுதியில் நடந்தது.
SG Road Vigilante பேஸ்புக்கில் பக்கத்தில் வெளியான வீடியோவின்படி, சைக்கிள் ஓட்டுநர் சாலையோரத்தில் போக்குவரத்து சிக்னல் அறிவுறுத்தல்களை புறக்கணித்து, சிவப்பு விளக்கை மீறிச் சென்றதாகவும்,எதிரே வந்த ஒரு கார் மோதியதாகவும்,
இதனால் அவரும் அவரது சைக்கிளும் தூக்கி வீசப்பட்டு தரையில் பலமாக விழுந்ததாக கூறப்படுகிறது.
புகாரைப் பெற்ற பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கார் மோதியதில் வாகன ஓட்டி சுயநினைவை இழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த நபர் சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக குடிமை தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
SG Road Vigilante பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவின்படி, சைக்கிள் ஓட்டுநர் சாலையோர போக்குவரத்து சிக்னல் அறிவுறுத்தல்களை புறக்கணித்து சிவப்பு விளக்கை மீறிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் எதிரே வந்த கார் அவர் மீது பலமாக மோதியுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 44 வயது கார் ஓட்டுநர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
