தெரு நேர்காணலில் சிங்கப்பூரைப் பற்றி தவறாக பேசிய பெண்...!!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்...!!!
அமெரிக்காவில் நடத்தப்பட்ட தெரு நேர்காணலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் சிங்கப்பூரைப் பற்றி பேசியது தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
emma_a_cosmos2 என்ற வலைப்பதிவர் ஒருவர் அமெரிக்காவில் தெரு நேர்காணலை நடத்தினார்.
ஒரு வெளிநாட்டுப் பெண்ணிடம் நீங்கள் மீண்டும் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்ப மாட்டீர்கள் என்று கேட்டார்.அதற்கு பதில் அளிக்கும் விதமாக அந்தப் பெண் தனக்கு மிகவும் பிடிக்காத ஒரு நாடு இருப்பதாகவும், அது சிங்கப்பூர் என்றும் கூறினார்.
ஏனென்றால் சிங்கப்பூருக்கு ஆளுமை இல்லை, வளமான வரலாறு மற்றும் கலாச்சாரம் இல்லை என்று கூறினார்.
அந்தப் பெண் உள்ளூர் பழங்காலக் கதைகள் மற்றும் வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்துள்ளார்.ஆனால் அங்கு அவர் எதிர்பார்த்தது போல எதையும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
இந்த நேர்காணல் வீடியோ டிக்டோக்கில் ஒளிபரப்பப்பட்ட பிறகு,அது சூடான விவாதங்களைத் தூண்டியது.
ஒரு இளம் நாட்டில் பழங்காலத் தடயங்களைத் தேடுவது அந்தப் பெண்மணிக்கு நியாயமற்றது என்று சிலர் கூறினர். மற்றவர்கள் அவர் ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து, ஒரு பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு நாட்டின் வளர்ச்சி வரலாற்றைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும் என்று கூறினர்.
அவர்களில் ஒருவர், சிங்கப்பூர்வாசி என்று நம்பப்படுகிறது.சிங்கப்பூர் ஒரு நவீன நகரம், உள்ளூர்வாசிகள் பழங்கால விஷயங்களை அதிகம் விரும்புவதில்லை என்று கூறினார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகவும் பின்தங்கியவை என்று வெளிநாட்டுப் பெண் நினைத்திருக்க வேண்டும் என்றும், அவர் சிங்கப்பூருக்கு வந்தபோது,அமெரிக்காவை விட அது மிகவும் வளமானது என்று நினைத்ததால் ஏமாற்றமடைந்ததாகவும் சில நெட்டிசன்கள் கேலி செய்தனர்.