மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர்!! என்ன நடந்தது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர்!! என்ன நடந்தது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்....

சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச்சாலையில்(BKE) மது போதையில் வாகனத்தை ஓட்டி ஒரு காருடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை காவல்துறை கைது செய்தது.

அந்த இளைஞர் காயமடைந்திருந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இந்த விபத்து ஜூன் 25 ஆம் தேதி(நேற்று) மாலை 7.15 மணியளவில் புக்கிட் திமா விரைவுச்சாலையில்,உட்லண்ட்ஸ் நோக்கி மண்டாய் சாலை வெளியேறும் இடத்திற்கு பிறகு நடந்தது.

இந்த விபத்தில் ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்டுள்ளதை காவல்துறையும்,சிங்கப்பூர் பாதுகாப்பு குடிமைத் தற்காப்புப் படையும் உறுதிப்படுத்தியது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

அவர் மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை கைது செய்தது .

இச்சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.