அமெரிக்காவில் படகு கவிழ்ந்த விபத்தில் மூவர் பலி…!!!

அமெரிக்காவில் படகு கவிழ்ந்த விபத்தில் மூவர் பலி...!!!

கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த விபத்தில் இரு குழந்தைகள் உட்பட ஐந்து பேரைக் காணவில்லை.

அவர்களை மீட்பதற்காக படகும் ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டது.

அவர்களில் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மூன்று பேர் உயிரிழந்ததை மீட்புக் குழுவினர் உறுதி செய்தனர்.

படகு எங்கிருந்து வந்தது, எங்கு செல்கிறது என்ற தகவல் கிடைக்கவில்லை.

ஆனால் படகில் இருந்தவர்களில் சிலர் இந்தியர்கள் என நம்பப்படுகிறது.

காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.