சிங்கப்பூரில் துப்பாக்கிச் சூடு தளத்திற்கு அருகே சைக்கிளோட்டிக்கு நேர்ந்த சோகம்!!

சிங்கப்பூரில் துப்பாக்கி சூடு தளத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார்.
சிலேத்தார் நீர்த்தேக்கம் பியர்ஸ் நீர்த்தேக்கத்துக்கு இடையே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 42 வயதுடைய ஒருவர் அவரது நண்பருடன் மிதிவண்டிகளில் சென்று கொண்டிருந்ததாக காவல்துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அனுமதி இன்றி துப்பாக்கி சூடு நடைபெறும் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகமும் ஆயுதப்படைகளும் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டன.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவரை அவரது நண்பர்கள் உடனே தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அறுவைச் சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டது.அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையும்,சிங்கப்பூர் ஆயுதப் படையும் விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டத.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
