விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!
தைவான் நாட்டில் ஜனவரி 21ஆம் தேதி தைச்சுங் பகுதியில் உள்ள ஆகாயப்படை தளத்தில் விமானத்தின் இயந்திரத்தில் சிக்கி பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் அந்தப் பெண் அதிகாரி இயந்திரத்தைச் சோதனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இயந்திரம் முழுமையாக நிற்காமல் இயங்கிக் கொண்டிருந்தது.அது அவரை உள்ளே இழுத்து க்கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த பெண் அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தைவானிய ஆகாயப்படை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.