விஜயகாந்தின் இளைய மகன் வடிவேலு குறித்து பேசியது வைரல்...!!!

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் தான் படைத்தலைவன்.
அன்பு இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (மே 15) நடைபெற்றது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேச்சி ஒன்றில் தனது குடும்பம் குறித்த சில சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசும்போது, ”எங்கள் அம்மா இல்லாமல், நாங்கள் ஒன்றுமில்லை. அம்மா தான் எங்கள் குடும்பத்தின் மிகப்பெரிய தூண். வெளியே இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம்” என்றார்.என் மாமாவைப் பற்றி தவறாகப் பேசலாம், என் அம்மாவைப் பற்றி தவறாகப் பேசலாம். என் சகோதரனைப் பற்றி தவறாகப் பேசலாம். ஆனால் எங்கள் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
மக்கள் என் அப்பாவைப் பற்றிப் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். சிலர் நான் ஏன் படம் பண்ண கூடாது?? எனது சகோதரன் ஏன் இன்னொரு தொழிலைத் தொடங்கக்கூடாது? எங்கள் அம்மாவும் அண்ணாவும் ஏன் அரசியலில் சிரமப்படுகிறார்கள்? என்பது போன்ற கேள்வி எழுப்பினர். இதற்கு ஒரே பதில் தான் எங்கள் தந்தை சொன்னதை நாங்கள் பின்பற்றுகிறோம், எங்கள் தந்தை எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததை நாங்கள் சரியாகப் பின்பற்றுகிறோம்.
மேலும் தனது தந்தை குறித்து தவறான பல கருத்துக்கள் பரவி வந்தாலும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீடியாக்கள் அவரை வேறுவிதமாக காட்சிப்படுத்தினர்.ஆனால் அது தொடர்பாக அவர் என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியதில்லை.அவர் தொடர்பான காட்சிகள் தொலைக்காட்சியில் வந்தாலும், அவர் உடனே சேனலை மாற்றுவார். அவர்கள் இப்படி தான் பேசுவார்கள் என்று கூறுவார். “நான் மக்களுக்கு நல்லது செய்ய வந்தேன், நான் நல்லது மட்டுமே செய்வேன்” என்று கூறுவார்.
வடிவேலு பிரச்சனை:
வடிவேலு சாருக்கு அப்பா, சினிமாவில் உதவி செய்துள்ளார் என்பது உண்மை. அதே நேரத்தில் வடிவேலு சாரும் மிகப்பெரிய திறமைசாலி. அதனால்தான் அவர் இந்த உயரத்தில் உள்ளார்.ஆனால் அவன் தன் தந்தையைப் பற்றிப் பேசியது தேவையில்லாதது. எனது தந்தைக்கு தொடர்பாக வருத்தம் இருந்திருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.அப்பா எப்போதாவது கவலைப்பட்டால், அவர் வடிவேலு சாரின் நகைச்சுவையைப் பார்ப்பார். என் படத்தில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.
என் அப்பாவும் வடிவேலு சார் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். ஆனால், கதாபாத்திர வடிவமைப்பிற்கு இளையவர் தேவைப்பட்டதால், நாங்கள் வடிவேலு சாரை அணுகவில்லை.”வடிவேலு சார் என் அப்பாவை விமர்சித்த பிறகு, ‘என் அப்பா அவர் சொன்னதை விட்டுவிடுங்கள், அவர் ஏதோ தெரியாமல் பேசினார்’ என்றார். என் அப்பா அப்படிச் சொன்ன பிறகு, அவர் விட்டுவிட வேண்டும். அதைப் பற்றி அவர் யோசித்துக்கொண்டிருக்கக் கூடாது,” என்று அவர் கூறினார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
