ஆன்லைன் கேமிங் விளையாடிய 8 காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை…!!!

ஆன்லைன் கேமிங் விளையாடிய 8 காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை...!!!

வேலை நேரத்தில் ஆன்லைன் கேம்களை விளையாடியதற்காக எட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஹியொகொ மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலமுறை தங்கள் மொபைல் போன்களில் விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் ஒரு நேரத்தில் 20 நிமிடங்கள் வரை விளையாடியதாகவும், சில சமயங்களில் ரோந்துப் பணியில் இருக்கும்போது விளையாடியதாகவும் கூறப்படுகிறது.

பெயர் குறிப்பிடாத ஒருவர் நவம்பர் மாதம் காவல் துறைக்கு அனுப்பிய கடிதத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து தெரியவந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை எட்டு பேரும் ஒரே நேரத்தில் பல முறை ஆன்லைன் கேமை விளையாட தங்கள் தனிப்பட்ட ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தினர்.

அதில் அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட குழுக்களை உருவாக்கினர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டனர்.

இதனால் ஏழு பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

மேலும் 38 வயதான அதிகாரியின் மாத சம்பளத்தில் 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.