யீஷூன் HDB கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தால் வேலை நிறுத்தம்..!!!

யிஷுனில் உள்ள வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத்தின் (HDB) கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை (மே 23) காலை 71 லோரோங் செஞ்சாருவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
பின்னோக்கிச் சென்ற கனரக வாகனம் மோதியதில் ஒரு வெளிநாட்டு தொழிலாளி இறந்தார்.
உயிரிழந்தவர் 29 வயதான பங்களாதேஷைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணையில் குத்தகைதாரருடன் ஒத்துழைப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் 61 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்தனர்.
ஒரு வெளிநாட்டு தொழிலாளி கட்டுமான தளத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, கனரக வாகனம் அவர் மீது மோதியது.
இறந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு நிறுவனம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
