இரத்த சர்க்கரை அளவில் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா..??? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!!

நம் இரத்தத்தில் குளுக்கோஸ் தேவையான அளவு இல்லை என்றால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.எனவே இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.அவற்றுள் முக்கியமானதாக நீரிழிவு நோய் உள்ளது.நீரிழிவு நோயால் காலப்போக்கில் இதயம், ரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகம், நரம்பு உள்ளிட்டவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படும்.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்னென்ன சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிட கூடாது என்பதே பெரும்பாலானோருக்கு எழும் கேள்வியாக உள்ளது.
எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை பின்பற்றுவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
✨️சக்கரை நோய் உள்ளவர்கள் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
✨️அதில் அதிக அளவு சர்க்கரை கொண்ட பழங்கள் மற்றும் குளிர்பானங்களை தவிர்க்கவும்.
✨️நட்ஸ் மற்றும் ஆழ்கடல் மீன்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
✨️கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
✨️உணவு கட்டுப்பாடுகளுடன் தினசரி நடைப்பயிற்சியையும் மேற்கொள்வது அவசியம்.
💠 நாவல் பழம்
நாவல் பழத்தையும்,நாவல் விதை பொடியையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், எந்த வகையான நீரிழிவு நோயும் கட்டுக்குள் வரும்.
நாவல் விதைகளை நன்கு உலர்த்தி பொடி செய்து தேநீராகக் குடித்தால், இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
💠 நித்திய கல்யாணி
👉 முதலில், சில நித்திய கல்யாணி பூக்களை எடுத்து நிழலான இடத்தில் பரப்பி உலர வைக்கவும்.
👉 அதன் பிறகு, நித்திய கல்யாணி பூக்களை ஈரப்பதம் இல்லாத கொள்கலனில் சேமிக்கவும்.
👉 பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும்.
👉 அதன் பிறகு, சில நித்திய கல்யாணி இதழ்களைச் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
👉 பின்னர் இந்த நித்திய கல்யாணி பானத்தை வடிகட்டி குடிக்கவும்.
👉 காலையிலும் மாலையிலும் இதை குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
💠 பாகற்காய்
👉 பாற்காய் மற்றும் பாகல் இலையை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
👉 பாகல் இலையை அரைத்து அதன் சாற்றைப் பிழிந்து குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
👉 தினமும் பாகற்காய் சாறு குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
💠கொய்யா இலைகள்
👉 முதலில், இரண்டு கொய்யா இலைகளை நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, பின்னர் அதில் ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
👉 இந்த கொய்யா இலை பானத்தை வடிகட்டி குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
💠வெந்தயம்
👉 ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி, இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
👉 பின்னர் இந்த வெந்தய பானத்தை வடிகட்டி குடிக்கவும்.
👉 இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
👉 அதேபோல் வெந்தயத்தை முளைக்கட்டி சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
