சிங்கப்பூரில் 41 வயது ஆடவர் உயிரிழப்பு!! எப்படி என்று தெரிந்து கொள்ள பதிவை முழுவதும் படியுங்கள்!!
சாலையில் முக்கிய சீல் சிகப்பு விளக்கை மீறி சென்றதாக சந்தேகிக்கப்படும் 41 வயது ஆண் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் ஒரு கார் மோதி தக்க சமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் பலத்த காயங்களால் உயிரிழந்தார்.
இந்த விபத்து ஜூன் 19ஆம் தேதி காலை 6:30 மணிக்கு விக்டோரியா தெருவில் Geylang சாலையை நோக்கி செல்லும் பகுதியில் நடந்துள்ளது.
சிங்கப்பூர் காவல்துறை இது குறித்து தெரிவித்தது என்னவென்றால் 41 வயது ஆண் சைக்கிள் ஓட்டுநர் மயக்க நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் பின்னர் அவர் பலத்த காயங்களால் இறந்ததாகவும் கூறியுள்ளது.
44 வயது ஆண் வாகன ஓட்டி போலீசாரின் விசாரணைக்கு உதவி வருகிறார்.
இது குறித்த காணொளி வேகமாக பேஸ்புக்கில் பரவி வருகிறது.
தயவுசெய்து யாரும் போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட வேண்டாம்.