சிங்கப்பூர்- ஜெர்மன் இருதரப்பு உறவுகளின் புதிய அத்தியாயம்…!!

சிங்கப்பூர்- ஜெர்மன் இருதரப்பு உறவுகளின் புதிய அத்தியாயம்...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனிக்கிடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் இருநாடுகளும் மேலும் நெருக்கமாக பணியாற்றலாம் என பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியான் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் மெர்ஸுடன் தொலைபேசி உரையாடல் நடத்திய பிரதமர் வோங், உரையாடல் இனிமையானதாக இருந்தது என கூறினார்.

இரு நாடுகளும் வர்த்தகம், தூய்மையான எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

கடந்த ஆண்டு, இருதரப்பு உறவு மூலோபாய கூட்டாண்மையாக மேம்படுத்தப்பட்டதை அவர் நினைவுபடுத்தினார்.

இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டில் சான்சலரை சந்தித்து, ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்குவதாக பிரதமர் வோங் தெரிவித்தார்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan