டிரைவிங் செய்யும் போது இந்த தவறு செய்யலாமா?

டிரைவிங் செய்யும் போது இந்த தவறு செய்யலாமா?

சிங்கப்பூர்: கார் ஓட்டும் போது மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும். இல்லையெனில் ஒரு நொடியில் தவறுதலாக விபத்து கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

வாகனம் ஓட்டுவது ஒரு தனிப்பெரும் கலை என்ற சொல்லலாம். வாகனம் ஓட்டும்போது எந்த ஒரு கவனச் சிதறலும் இல்லாமல் ஓட்டுவது இன்றியமையாதது.

சிங்கப்பூரில் டாக்ஸி டிரைவர் ஒருவர் டிரைவிங் செய்யும் போது செய்யக்கூடாத தவறு ஒன்றை செய்துள்ளார்.


கடந்த மாதம் அக்டோபர் 31, 2025 அன்று ஒரு பயணியை Craig Road வரை அழைத்துச் சென்ற டாக்ஸி டிரைவர் கிட்டத்தட்ட 21 நிமிடங்கள் காரை இயக்கியபடியே மொபைல் மூலமாக Auto Scroll முறையில் Tik Tok இல் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த தகவலை காரில் பயணம் செய்யும் பயணி ஒருவர் புகார் கொடுத்த நிலையில் ஓட்டுநர் உடனே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது போன்ற தவறினை வாகனம் ஓட்டும் போது செய்தால் பெரிய ஆபத்தில் சென்று முடிய வாய்ப்பு உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK