அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியத்தை சேதப்படுத்திய குழந்தை..!!!

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியத்தை சேதப்படுத்திய குழந்தை..!!!

நெதர்லாந்தின் அருங்காட்சியகத்தில் இருந்த 50 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஓவியத்தை ஒரு குழந்தை சேதப்படுத்தியுள்ளது.

அமெரிக்க கலைஞர் மார்க் ரோத்கோவின் இந்த கலைப்படைப்பு, போயிஜ்மான்ஸ் வான் பியூனிங்கன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

“Grey, Orange on Maroon, No. 8” என்ற அந்த ஓவியத்தில் சிறிய கீறல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அருங்காட்சியகம் தெரிவித்தது.

1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்கு யார் பொறுப்பு என்பதை அருங்காட்சியகம் தெரிவிக்கவில்லை.

போய்ஜ்மான்ஸ் வான் பியூனிங்கன் அருங்காட்சியகம் முன்பு கலைப்படைப்புகளை சேதப்படுத்துபவர்களிடம் கட்டணம் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan