சிண்டாவின் இளம் தலைவர்கள் கருத்தரங்கு 2025…!!!

சிண்டாவின் இளம் தலைவர்கள் கருத்தரங்கு 2025...!!!

சிண்டாவின் இளம் தலைவர்கள் கருத்தரங்கின் 13வது பதிப்பு நடைபெற்றது. 

மூன்று நாட்கள் நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாம் தேசிய பல்கலைக்கழகத்தின் ரிட்ஜ் வியூ குடியிருப்பு கல்லூரியில் நடைபெற்றது.

தொடக்கப் பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் போன்றவற்றிலிருந்து 80 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் மனிதவளம், கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான இணையமைச்சர் தினேஷ் வாசுதாஸ் பங்கேற்றார்.

சமூகத்தில் எழுந்துள்ள மற்றும் எழக்கூடிய சவால்களுக்கு இளைஞர்களைத் தயார்படுத்துவதே இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.